தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே
-- #திருமூலர் 🌺🙏🏽🙇🏽♂️, #திருமந்திரம் #8
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
திரு #தாயுமானவர்
குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்!
-- திரு #முருகனார் #சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️ (#குருவாசகக் #கோவை #1198)
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ!!
-- திரு தாயுமான சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️
மெய்கண்டாரே தூய்மையான அத்துவிதத்தைக் கண்டு கூறினார். மற்றவர் கூறியதெல்லாம் மலத்துடன் கூடிய அத்துவிதமாகும். 12ம் நூற்றாண்டில் இப்பெரியார் தோன்றியிருக்காவிட்டால் பாரத தத்துவவியல் குழப்பவியலாகியிருக்கும்!!
(திரு #மெய்கண்ட #தேவ #நாயனாரின் சமாதி 🌺🙏🏽🙇🏽♂️, திருவெண்ணெய்நல்லூர்)
"#முத்தமிழ் #காவலர்" திரு #கிஆபெ விசுவநாதம் அவர்கள் எழுதிய "#திருக்குறள் #கட்டுரைகள்" எனும் நூலிலிருக்கும் "#மறைமொழி" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற பொருளில் ஆகும். ...
இன்று கண்ணில் பட்ட #விகடனின் #ஊழியம் - "#இந்தியா #கண்டுபிடிக்கப்பட்ட #கதை - 11"!!
உண்மையில் தலைப்பு எப்படியிருக்க வேண்டுமெனில்...
👊🏽 பேட்டை தாதா அலெக்சாண்டர் மாவீரனாக்கப்பட்ட கதை
👊🏽 மன்னர் புருசோத்தமனிடம் அலெக்சு தோற்ற கதை
👊🏽 மன்னருடன் நடந்த போரில் அலெக்சின் நுரையீரல் பங்க்சராகி, குணமாகாமல் புட்டுக்கொண்ட கதை ...
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்!!
🌺🙏🏽🙇🏽♂️
கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த 3 ஹாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ள உயர்தரமான உரையாடல் பகுதிகளிலிருந்து சிற்சில பகுதிகளை இந்த இடுகையில் பார்ப்போம். ...
http://samicheenan.blogspot.com/2021/05/1984-2049-x.html
என்னை நான் எவ்வாறு அறிந்திருக்கின்றேனோ அவ்வாறே என்னைக் காண்போரே என்னைச் சரியாக அறிந்தோராவர்!!
-- #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️
(பகவான் என்பது அவரது பெயரோ, உருவமோ, உடலோ அல்ல. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, என்றும் அழியாத, மாறாத, சுய ஒளி பொருந்திய உள்ளபொருளாகும்.)
திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!! 🌺🙏🏽😍
🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!! ...
http://samicheenan.blogspot.com/2021/05/blog-post.html?m=1
#அண்ணாமலையார்
#பகவான் #ரமணர்
#முருகப்பெருமான்
#சக்கிரத்தாழ்வார்
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"